பராமரிப்புப் பணி – பழனி முருகன் கோயிலில் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவை நிறுத்தம்!

தமிழகம்

பராமரிப்புப் பணி – பழனி முருகன் கோயிலில் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவை நிறுத்தம்!

பராமரிப்புப் பணி – பழனி முருகன் கோயிலில் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவை நிறுத்தம்!

பழனி மலைக் கோயிலில் நாளை(ஆக. 19) முதல் ஒரு மாதத்திற்கு ரோப் காா் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மலைக்குச் செல்வதற்கு ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பராமரிப்புப் பணி காரணமாக நாளை(ஆக. 19) முதல் ஒரு மாதத்திற்கு ரோப்காா் சேவை நிறுத்தப்படுவதாகவும் பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் செல்ல மின் இழுவை ரயில், படிப்பாதை, யானைப்பாதை ஆகிய வழிகளை பயன்படுத்துமாறும் கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.

Leave your comments here...