ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை..!

இந்தியா

ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை..!

ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை..!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் இன்று நடைபெற்ற என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த தகவலை ஜம்மு கூடுதல் காவல்துறை இயக்குநர் (ஏடிஜிபி) முகேஷ் சிங் தெரிவித்துள்ளார். புதால் பகுதியில் உள்ள குந்தா-கவாஸ் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு போலீசார் மற்றும் ராணுவம் நடத்திய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போது என்கவுன்டர் நடந்துள்ளது.

முற்றுகையிடப்பட்ட கிராமத்திலிருந்து துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதாகவும், சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படையினர் விரைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஜம்முவில் என்கவுன்டர் நடந்து வருவதாக தெரிவித்த, ஏ.டி.ஜி.பி, ” இதுவரை ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளார்,” என்று தெரிவித்தார்.

Leave your comments here...