ன்.எல்.சி.க்குள் நுழைய பாமகவினர் முயற்சி – காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல்..!

தமிழகம்

ன்.எல்.சி.க்குள் நுழைய பாமகவினர் முயற்சி – காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல்..!

ன்.எல்.சி.க்குள் நுழைய பாமகவினர் முயற்சி – காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல்..!

என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்க பணிகளை கைவிட வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பா.ம.க.வினர் கலந்து கொண்டனர்.

என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து அன்புமணி ராமதாஸ் பேசினார். பின்னர், அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி.க்குள் நுழைவதற்காக பா.ம.க.வினர் புறப்பட்டனர். என்.எல்.சி. வாயில் நோக்கி புறப்பட்ட பா.மக.வினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் உருவானது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட்ட பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தனர். அன்புமணியை ஏற்றி சென்ற போலீஸ் வாகனத்தை மறித்து பா.ம.க.வினர் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் போலீஸ் மீது பாமகவினர் கல் வீசினர். இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைத்தனர்.

Leave your comments here...