மணிப்பூர் வன்முறையில் மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை – கூட்டறிக்கை வெளியிட்டு எம்.எல்.ஏ.க்கள்..!

இந்தியா

மணிப்பூர் வன்முறையில் மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை – கூட்டறிக்கை வெளியிட்டு எம்.எல்.ஏ.க்கள்..!

மணிப்பூர் வன்முறையில் மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை –  கூட்டறிக்கை வெளியிட்டு எம்.எல்.ஏ.க்கள்..!

மணிப்பூரில் கடந்த மே 3-ந்தேதி மெய்தி சமூகம் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டது. இது பல இடங்களில் பரவி கலவரம் வெடித்தது. வீடுகள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதன்பின்னரும், தொடர்ந்து வன்முறை சம்பவம் நீடித்து வருகிறது. ராணுவ ஆயுதங்களை ஒரு கும்பல் பறித்து சென்றது. இதனால், ஆயுதங்களை திரும்ப ஒப்படைக்க ராணுவம் கோரிக்கை விடுத்தது. அரசும் அமைதி காக்கும்படி மக்களை வேண்டி கொண்டது

இந்த சூழலில், மணிப்பூரில் உள்ள ஒரு மாவட்டத்தில் குகி பழங்குடி சமூக பெண்கள் இருவரை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் இழுத்துச்சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரலானது.

கடந்த மே 3-ந்தேதியில் இருந்து மணிப்பூரில் இணையதளம் சஸ்பெண்டான நிலையில், இந்த பலாத்கார வீடியோ சமீபத்தில் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், எங்கள் சமூகத்தில் இதுவரை 114 பேர் உயிரிழந்து உள்ளனர் என குகி சமூகத்தின் 10 எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக இன்று அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

இம்பால் நகரில் கடந்த மே 4-ந்தேதி குகி இனத்தின் மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என்றும் அவர்கள் அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர். லாங்கோ, நகாரியன் மலைப்பகுதியில் நர்சிங் மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை என இது பற்றி கூட்டறிக்கையில் தெரிவித்து உள்ள அவர்கள் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட ஒட்டுமொத்த நாடும் கைகோர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

Leave your comments here...