ரூ.24 லட்சம் ரொக்கம் : யூடியூப் வீடியோ மூலம் ஒரு கோடிக்கு மேல் வருமானம் – வருமான வரித்துறை அதிரடி ரெய்டு..!

இந்தியா

ரூ.24 லட்சம் ரொக்கம் : யூடியூப் வீடியோ மூலம் ஒரு கோடிக்கு மேல் வருமானம் – வருமான வரித்துறை அதிரடி ரெய்டு..!

ரூ.24 லட்சம் ரொக்கம் : யூடியூப் வீடியோ மூலம் ஒரு கோடிக்கு மேல் வருமானம் –  வருமான வரித்துறை அதிரடி ரெய்டு..!

யூடியூப் மூலமாக பல லட்சங்கள் சம்பாதிப்பவர்கள் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் பரேலி பகுதியை சேர்ந்த யூடியூப் சேனல் நடத்தி வரும் தஸ்லீம் என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.24 லட்சம் ரொக்கம் கிடைத்திருக்கிறது.

இந்த சேனல் நடத்தி வருபவரான தஸ்லீம், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். பல ஆண்டுகளாக யூடியூப் சேனலை நடத்தி, அவர் கிட்டத்தட்ட ரூ.1 கோடிக்கும் மேல் சம்பாதித்திருக்கிறார். தஸ்லீம் சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் நிலையில், அவர் குடும்பம் இதனை மறுத்துள்ளது.

இது குறித்து தஸ்லீமின் சகோதரர் ஃபெரோஸ் கூறும்போது, ”டிரேடிங் ஹப் 3.0 (Trading Hub 3.0) என்ற யூடியூப் கணக்கை நிர்வகித்து வரும் தஸ்லீம், ஷேர் மார்க்கெட் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவரது வருமானத்திற்கு அவர் வருமான வரியும் செலுத்தி வருகிறார்.மொத்த யூடியூப் வருமானமாக கிடைத்த ரூ.1.2 கோடி வருமானத்திற்கு ஏற்கனவே ரூ.4 லட்சம் வரி செலுத்தப்பட்டு விட்டது. நாங்கள் ஒரு யூடியூப் சேனலை நடத்துகிறோம். வேறு எந்த தவறான செயலும் செய்யவில்லை. சேனலில் எங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. இதுதான் உண்மை. இந்த ரெய்டு ஒரு திட்டமிடப்பட்ட சதி.”இவ்வாறு ஃபெரோஸ் கூறியிருக்கிறார்.தனது மகன் தவறாக குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதாக தஸ்லிமின் தாய் கூறியுள்ளார்.

யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பிரபலமாக இருப்பவர்கள், வீடியோக்களை உருவாக்கி வெளியிடுபவர்கள் மீது வருமான வரித் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. வருமானத்தை காட்டவில்லை, வருமானத்திற்கு ஏற்ப லாபம் சம்பாதிக்கவில்லை என குற்றஞ்சாட்டி, சமூக ஊடங்க பிரபலங்களின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. வீடியோ வெளியிடுபவர்களில் பலர் வருமான வரி தாக்கல் செய்வதில்லை அல்லது வருமானத்தை குறைத்து காட்டுவதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருவாய் ஈட்டுபவர்கள், மீது எந்தளவுக்கு வரி விதிக்க வேண்டும் என்பது குறித்து வரி நிபுணர்களிடையே முரண்பாடுகள் நிலவுகிறது. சமீபத்தில், சிஎன்பிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு கட்டுரையில், வீடியோ வெளியிட்டு பணம் சம்பாதிப்பவர்களை தொழில்முனைவோராகக் கருதலாம் என்றும், அவர்களின் வருமானம் ரூ. 1 கோடிக்கு மேல் இருந்தால் அவர்களுக்கு வரித் தணிக்கை பொருந்தும் என்றும் சில நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave your comments here...