எந்த மனிதரையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்கக்கூடாது – முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழகம்

எந்த மனிதரையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்கக்கூடாது – முதலமைச்சர் ஸ்டாலின்

எந்த மனிதரையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்கக்கூடாது  – முதலமைச்சர் ஸ்டாலின்

எந்த மனிதரையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்கக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் 34 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார்.

பின்னர் விழாவில் பேசிய முதல்வர்;- எந்த மனிதரையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்கக்கூடாது. கலைஞர் வழியை திராவிட மாடல் அரசு பின்பற்றி செயல்பட்டு வருகிறது. கலைஞர் ஆட்சியில் அனைத்து துறைகளும் பொற்காலமாக இருந்தன என்று முதலமைச்சர் கூறினார். திராவிட மாடல் அரசின் திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்துசமய அறநிலையத்துறையை கொண்டு வந்தது திராவிட மாடல் அரசுதான் என்றும் குறிப்பிட்டார்.

இந்துசமய அறநிலையத்துறையின் பொற்காலமாக இந்த திமுக ஆட்சிதான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். பழமையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க, திருப்பணிகள் மேற்கொள்ள 100 கோடி ஒதுக்கி பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இவ்வாண்டில் 5000 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் சூட்டுங்கள் என்று முதல்வர் தெரிவித்தார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்: சாதியால் யாரையும் தள்ளிவைக்கக் கூடாது என்ற நோக்கில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் யாராக இருந்தாலும் எந்த சாதியாக இருந்தாலும் அர்ச்சகர் ஆகலாம். பட்டியலினத்தை சேர்ந்த 17 பேரை கோயில் அர்ச்சகர்கள் ஆக்கியுள்ளோம். அனைத்து சாதியினர் அர்ச்சகர்ஆகும் திட்டத்தை ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களும் பின்பற்றுகின்றன. ஏராளமான கோயில்களில் குடமுழுக்கு உள்ளிட்ட பணிகளை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. அனைத்து துறைகளிலும் அனைவரும் கோலோச்ச வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இந்து சமய அறநிலையத்துறையை உருவாக்கியதே நீதிக்கட்சி ஆட்சிதான் என்று முதல்வர் குறிப்பிட்டார். மேலும் பல்வேறு கோயில்களில் திருப்பணிகளை செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அறம் சார்ந்த தொண்டுகள் செய்வதால்தான் இந்து சமய அறநிலையத்துறை என பெயர் பெற்றது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...