குடியுரிமை சட்டம்:  வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை பின்னணியில் காங்கிரஸ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!

அரசியல்இந்தியா

குடியுரிமை சட்டம்:  வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை பின்னணியில் காங்கிரஸ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!

குடியுரிமை சட்டம்:  வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை பின்னணியில் காங்கிரஸ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!

ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் 5 கட்டங்களாக நடக்கிறது. நான்காம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இந்நிலையில், தும்காவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி.

அப்போது பேசிய அவர் :- குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மக்களை தூண்டிவிடுகின்றன.  இந்தியாவுக்கு தப்பிவந்து அகதிகளாக வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச சிறுபான்மை சமூகத்தினருக்கு மரியாதை செலுத்துவதற்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் போராட்டங்களை ஆதரிக்கின்றன.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக காங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும் புயலைக் கிளப்பின. குடியுரிமை திருத்தம் தொடர்பான வன்முறை சம்பவங்களுக்கு  காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் அமைதியான ஆதரவை அளித்து வருகின்றனர்.  ஆட்சியில் இருந்த எதிர்க்கட்சியினர் மக்களின் துன்பங்களை பற்றி கவலைப்படவில்லை. ஆட்சியில் இருந்தபோது எதிர்க்கட்சிகள் தங்களின் குடும்பத்தினருக்கு பங்களாக்கள் கட்டிக்கொண்டனர். அசாமில் வன்முறையை புறக்கணித்து தற்போது அமைதிக்கு திரும்பிய சகோதர, சகோதரிகளுக்கு நன்றி. வன்முறையில் ஈடுபடுபவர்களின் ஆடையை வைத்தே யார் வன்முறையை தூண்டுகிறார்கள் என்பதை மக்கள் அறியலாம் எனக் கூறினார்

Leave your comments here...