ஞானவாபி மசூதியில் சிவலிங்க வடிவத்தின் தொன்மையை அறிய விஞ்ஞானப்பூர்வமான ஆய்வு – உயர் நீதிமன்றம் உத்தரவு..!

இந்தியா

ஞானவாபி மசூதியில் சிவலிங்க வடிவத்தின் தொன்மையை அறிய விஞ்ஞானப்பூர்வமான ஆய்வு – உயர் நீதிமன்றம் உத்தரவு..!

ஞானவாபி மசூதியில் சிவலிங்க வடிவத்தின் தொன்மையை அறிய விஞ்ஞானப்பூர்வமான ஆய்வு – உயர் நீதிமன்றம் உத்தரவு..!

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் (காசி) உள்ள ஞானவாபி மசூதியில் கண்டறியப்பட்டுள்ள சிவலிங்கம் போன்ற வடிவம் எந்த காலத்தைச் சோ்ந்தது என்பதை தெரிந்துகொள்ள, அறிவியல்பூா்வமாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு அலாகாபாத் உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி உள்ளது. முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில், கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு அந்த மசூதி கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.அந்த மசூதியில் சிவலிங்கம் இருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் அது மசூதியில் தொழுகைக்கு முன், கை, கால்களை சுத்தப்படுத்திக்கொள்ளும் நீருற்றின் பகுதிதான் என்று மசூதி நிா்வாகத்தினா் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், சிவலிங்கம் போன்ற வடிவம் எந்தக் காலத்தைச் சோ்ந்தது என்பது குறித்து அறிவியல்பூா்வமாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் லட்சுமி தேவி என்ற பெண் உள்பட 4 ஹிந்துக்கள் மனு தாக்கல் செய்தனா். அந்த மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து அலாகாபாத் உயா் நீதிமன்றத்தை மனுதாரா்கள் அணுகினா். அவா்களின் மனு நீதிபதி அரவிந்த் குமாா் முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், ‘சிவலிங்கம் போன்ற வடிவத்தின் காலத்தை தெரிந்துகொள்ள, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிவியல்பூா்வமாக அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அந்த வடிவத்துக்கு எந்த சேதமும் ஏற்படக் கூடாது’ என்று உத்தரவிட்டாா்.

Leave your comments here...