குடியுரிமை சட்ட மசோதா: துணிச்சலான நடவடிக்கை: மோடி, அமித்ஷாவுக்கு – ஆர்எஸ்எஸ் பாராட்டு..!

அரசியல்

குடியுரிமை சட்ட மசோதா: துணிச்சலான நடவடிக்கை: மோடி, அமித்ஷாவுக்கு – ஆர்எஸ்எஸ் பாராட்டு..!

குடியுரிமை சட்ட மசோதா: துணிச்சலான நடவடிக்கை: மோடி, அமித்ஷாவுக்கு – ஆர்எஸ்எஸ் பாராட்டு..!

குடியுரிமைத் திருத்த மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31 ந் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை திருத்த சட்டம் மசோதா வழி வகை செய்கிறது.

ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு இது சட்டமாகும். குடியிருப்பு மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வங்கதேச மக்களின் ஊடுருவலுக்கு எதிராக நீண்ட காலம் போராட்டம் நடத்தி வரும் அசாம் மக்கள், இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி (Center)

குடியுரிமை திருத்த மசோதா துணிச்சலான நடவடிக்கை என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave your comments here...