சட்ட விரோத குடியேறிகளை நம்பித்தான் காங்கிரஸ் கட்சி உள்ளது: பிரதமர் மோடி

அரசியல்

சட்ட விரோத குடியேறிகளை நம்பித்தான் காங்கிரஸ் கட்சி உள்ளது: பிரதமர் மோடி

சட்ட விரோத குடியேறிகளை நம்பித்தான் காங்கிரஸ் கட்சி உள்ளது: பிரதமர் மோடி

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி,

நாட்டு நலனுக்காக கடினமான சில முடிவுகளை எடுப்பதை காங்கிரஸ் கட்சி எப்போதும் தவிர்த்தது. நீண்டக்கால பிரச்சினையான அயோத்திக்கு அமைதியான முறையில் தீர்வுக்காணப்பட்டுள்ளது.

வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம் தான் ஜார்க்கண்டை உருவாக்கியது. வாக்கு வங்கி அரசியலைப்பற்றி எனக்கு கவலை கிடையாது. எப்போதும் மக்கள் நலனுக்காக உழைப்பதில் மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளேன். அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் கட்சி என்ற அடிப்படையில் நாடு முழுவதும் பா.ஜ.க. மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மேலும், சட்ட விரோத குடியேறிகளை நம்பித்தான் காங்கிரஸ் கட்சி உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Leave your comments here...