திமுக தொடுத்த வழக்கு: உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

அரசியல்

திமுக தொடுத்த வழக்கு: உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

திமுக தொடுத்த வழக்கு: உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை எனக் கூறி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது:-  அதில் புதிய மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு முறை உள்ளாட்சித் தேர்தலில் கடைபிடிக்கப்படவில்லை என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தரப்பு வழக்கறிஞர் அபிசேக் மனு சிங்வி வாதிடுகையில், “1991 மக்கள் தொகை கணக்கெடுப்பு படிதான் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றபட்டவில்லை. சுழற்சி முறையில் வழங்க வேண்டிய பெண்களுக்கான இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 1991 மக்கள் தொகை கணக்கீட்டை இப்போதும் பயன்படுத்துகின்றனர். தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்திலேயே இதை தெளிவாக கூறியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர்:- “தேர்தலை சந்திக்க திமுகவுக்கு விருப்பமில்லை. அதனால்தான் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பிரமாணப் பத்திரத்தை திமுக சரியாக படிக்கவில்லை. ஆகவே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக சொல்வது அனைத்து பொய்” என தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு தீர்ப்பை அளித்தது. அதில், 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கின் அடிப்படையிலேயே ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும். மேலும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தற்போது தடை எதுவும் இல்லை. மேலும் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...