ஆசிய அளவில் அதிகமாக மாசடைந்த, டாப் 10 பட்டியலில் இந்தியாவின் 8 நகரங்கள்….!

இந்தியா

ஆசிய அளவில் அதிகமாக மாசடைந்த, டாப் 10 பட்டியலில் இந்தியாவின் 8 நகரங்கள்….!

ஆசிய அளவில் அதிகமாக மாசடைந்த, டாப் 10 பட்டியலில் இந்தியாவின் 8 நகரங்கள்….!

ஆசிய அளவில் அதிகமாக மாசடைந்த, 10 நகரங்களின் பட்டியலில், எட்டு இந்தியாவைச் சேர்ந்தவை. ஆனால், தேசிய தலைநகர் புதுடில்லி இதில் இடம்பெறவில்லை

உலக அளவில் தொழிற்சாலைகள், வாகன புகை, கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் காற்று அதிக அளவில் மாசடைந்து வருகிறது. இதனால், மனிதர்களுக்கு நோய்கள் பல தாக்குவதுடன், அவர்களின் வாழ்நாள் குறைந்து வருகிறது என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. உலக அளவில் காற்று தரம் பற்றி மதிப்பீடு செய்து காற்று மாசு பற்றி குடிமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உதவிடவும் வகையில் 2007-ம் ஆண்டு உலக காற்று தர குறியீடு அமைப்பு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, ஆசிய நாடுகளில் அதிக மாசடைந்த நகரங்கள் பற்றி ஆய்வு செய்து டாப் 10 நகரங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில், இந்தியாவில் மட்டும் 8 நகரங்கள் டாப் 10-ல் இடம் பெற்று அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் குருகிராம் நகரம் உள்ளது. இதன் காற்று தர குறியீடு 679 புள்ளிகள் என்ற அளவில் உள்ளது. இதனை தொடர்ந்து, ரேவாரி நகர் அருகே உள்ள தருஹெரா (543) மற்றும் பீகாரில் உள்ள முசாபர்பூர் (316) ஆகிய நகரங்கள் உள்ளன. எனினும், இந்த பட்டியலில் தலைநகர் டெல்லி இடம் பெறவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது.

இதுதவிர, லக்னோவுக்கு உட்பட்ட டாகடோர், பெகுசராய்க்கு உட்பட்ட டி.ஆர்.சி.சி. ஆனந்த்பூர், திவாஸ்க்கு உட்பட்ட போபால் சவுரஹா, கல்யாணுக்கு உட்பட்ட கதக்பாத, சாப்ராவுக்கு உட்பட்ட தர்சன் நகர் ஆகிய 5 நகரங்கள் அடுத்தடுத்து பட்டியலில் இடம் பெற்று உள்ளன. இவை அனைத்தும் காற்று தர குறியீட்டில் 200-க்கும் கூடுதலான புள்ளிகளுடன் உள்ளன. இந்திய நகரங்கள் தவிர, சீனாவின் லுசவ் பகுதிக்கு உட்பட்ட ஜியாவ்ஷிஷாங் (262) நகரமும், மங்கோலியாவின் உலான்பாட்டா பகுதியில் உள்ள பயங்கோஷு நகரமும் பட்டியலில் உள்ளன.

காற்று தர குறியீடு பூஜ்யம் முதல் 50-க்குள் இருப்பது நலம் என்றும் 51 முதல் 100 என்பது மித அளவிலும், 101 முதல் 150 வரை என்பது உடனடியாக பாதிப்பிற்கு இலக்காகும் குழுக்களுக்கு சுகாதாரமற்றது என்றும், 151 முதல் 200 வரை அனைத்து தரப்பினருக்கும் சுகாதாரமற்றது என வகைப்படுத்தப்பட்டு உள்ளது. 201 முதல் 300 வரை அதிக பாதிப்பு ஏற்படுத்தும் சுகாதாரமற்ற நிலை மற்றும் 301 முதல் 500 வரை மனித சுகாதாரத்திற்கு பெரிய அளவில் தீங்கு விளைவிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், ஆந்திர பிரதேச மாநிலத்தின் ராஜமகேந்திரவரம் என்ற ஒரே ஒரு நகரம் சிறந்த காற்று தரம் கொண்ட நகரங்களின் வரிசையில் டாப் 10 பட்டியலில் இடம் பெற்று உள்ளது சற்று ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave your comments here...