ராஜராஜ சோழன் எங்கே மசூதி,சர்ச் கட்டினார்..? வெற்றி மாறன் விளக்க வேண்டும் – ஹெ.ச் ராஜா

அரசியல்

ராஜராஜ சோழன் எங்கே மசூதி,சர்ச் கட்டினார்..? வெற்றி மாறன் விளக்க வேண்டும் – ஹெ.ச் ராஜா

ராஜராஜ சோழன் எங்கே மசூதி,சர்ச் கட்டினார்..?  வெற்றி மாறன் விளக்க வேண்டும் – ஹெ.ச் ராஜா

ராஜராஜ சோழன் எங்கே மசூதி,சர்ச் கட்டினார் என வெற்றி மாறன் விளக்க வேண்டும். ராஜராஜ சோழன் நூறு சதவீத இந்து மதம்தான், திருமாவளவன், சீமான் இருவரும் தேச துரோகிகள்.முதல்வர் ஸ்டாலின் மிகவும் நல்லவர். ஆனால் அவருடன் இருப்பவர்கள் அவரை கொம்பு சீவி விடுகிறார்கள் என பாஜக மூத்த தலைவர் ஹெ.ச் ராஜா கூறினார்.

இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் அக்.11-ல் திருமாவளவன் நடத்தவுள்ள மனித சங்கிலிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது. மனித சங்கிலிக்கு அனுமதி வழங்கினால் 1991-ல் நடந்தது இப்போதும் நடைபெறும். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்ததால், 1991ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதை முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். பயங்கரவாதிகளின் கைக்கூலி திருமாவளவன். அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாடு முழுவதும் பிஎப்ஐ மற்றும் அதனுடன் தொடர்புடைய இயக்கங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த இயக்கத்துக்கு ஆதரவாக பேசுவதும், செயல்படுவதும் சட்டப்படி குற்றமாகும். திருமாவளவன்,சீமான் இருவரும் தேச துரோகிகள். இதனால் இருவரும் கைது செய்யப்பட வேண்டும். முதல்வர் ஸ்டாலின் மிகவும் நல்லவர். ஆனால் ஸ்டாலினுடன் இருப்பவர்கள் அவரை கொம்பு சீவி விடுகிறார்கள்.

புதுச்சேரியில் அக்.2-ல் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அமைதியாக நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தும் போலீசார் அனுமதி மறுத்தனர். தமிழகத்தில் மாற்றம் வந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தடை விதிக்கிறார்கள். தமிழகத்தில் நடைபெறும் இந்திய விரோத, தமிழ் விரோத ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். அதுவரை எங்களின் போராட்டம் தொடரும்.

தமிழக டிஜிபி, பிஎப்ஐ-க்கு ஆதரவாகவும், திருமாவளவனுக்கு சாதகமாகவும் பேசியது துரதிர்ஷடவசமானது. காவல் துறைக்கு தலைவராக இருக்க டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு தகுதி இல்லை. டி.ஜி.பி-க்கு சைக்கிளில் செல்லவே நேரம் சரியாக உள்ளது.

ராஜராஜ சோழன் எங்கே மசூதி,சர்ச் கட்டினார் என வெற்றி மாறன் விளக்க வேண்டும். ராஜராஜ சோழன் நூறு சதவீத இந்து மதம்தான். இந்தியாவின் பிறந்த அனைத்து மதங்களும் இந்து மதம் தான். சிவம், சைவம், வைணவம் என்பது வேறு வேறல்ல. அனைத்தும் ஹிந்து மதம்தான். மேலும் அரசியலமைப்பு சட்டப்படி ராஜராஜ சோழன் இந்து தான். இவ்வாறு அவர் பேசினார்.

Leave your comments here...