யு.கே.ஜி பயிலும் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை – அரசு பள்ளி ஆசிரியர் கைது..!

சமூக நலன்

யு.கே.ஜி பயிலும் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை – அரசு பள்ளி ஆசிரியர் கைது..!

யு.கே.ஜி பயிலும் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை – அரசு பள்ளி ஆசிரியர் கைது..!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 1600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். சேத்துப்பட்டு அருகே மருத்துவம்பாடி கிராமத்தை சேர்ந்த பிரபாவதி என்பவர் தாளாளராக பள்ளியை நடத்தி வருகிறார். இவரது கணவர் காமராஜ் (வயது 49), சேத்துப்பட்டு அருகே உலகம்பட்டு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த பள்ளியில் சேத்துப்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 4½ வயது சிறுமி யு.கே.ஜி. வகுப்பு படித்து வருகிறாள். சில நாட்களுக்கு முன்பு பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற மாணவி, பெற்றோரிடம் உடல் முழுவதும் வலிப்பதாக அழுது உள்ளார். அதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அவளை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து சில நாட்கள் கழித்து மீண்டும் பள்ளிக்கு அனுப்பினர். பள்ளிக்கு சென்ற சிறுமி மீண்டும் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் அழுதுள்ளார்.

அப்போது சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்தபோது, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆசிரியர் காமராஜ் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் பள்ளிக்கு சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

மேலும் பள்ளியில் உள்ள பணிபுரியும் அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் திருச்செந்தூர் சென்றிருந்த காமராஜை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சேத்துப்பட்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தனியார் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

Leave your comments here...