ரயில் நிலைய இலவச “Wifi” மூலம் ஆபாச படம் டவுன்லோடு செய்யும் பயனர்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்..!

இந்தியா

ரயில் நிலைய இலவச “Wifi” மூலம் ஆபாச படம் டவுன்லோடு செய்யும் பயனர்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்..!

ரயில் நிலைய இலவச “Wifi” மூலம் ஆபாச படம் டவுன்லோடு செய்யும் பயனர்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்..!

ரயில் நிலையங்களில் வழங்கப்படும் இலவச வைஃபை வசதியை ஆபாச படங்களை பார்க்கவும் டவுன்லோட் செய்யவும் பயனர்கள் அதிகம் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இதில் செகந்திராபாத் முதல் இடத்தில் உள்ளது.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இணைய பயன்பாடு என்பது அபரிமித வளர்ச்சியை பெற்றுள்ளது. அந்த வகையில், பயணிகளை டிஜிட்டல் முறையில் இணைப்பதற்காக ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த வைஃபையை குறிப்பிட்ட நேரம் (அரை மணி நேரம்) அளவு வரை இலவசமாக பயன்படுத்தலாம்.

முதன்முறையாக கடந்த 2016ஆம் ஆண்டில் மும்பை ரயில் நிலையத்தில் இலவச வைஃபை வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது நாடு முழுவதும் பல்வேறு ரயில் நிலையங்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டு செயல்பட்டில் உள்ளது. இந்நிலையில் இந்த இலவச வைஃபை சேவை ஆபாச படம் பார்க்கவும், டவுன்லோடு செய்யவுமே அதிகம் பயன்படுத்தப் பட்டு வருவது தெரியவந்துள்ளது.

இலவச வைஃபை சேவை வழங்கிவரும் ரெயில்டெல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த தகவலின்படி, தெற்கு மத்திய ரெயில்வேயின் கீழ் வரும் செகந்திராபாத்தில் தான் அதிகபட்சமாக ஆபாச வீடியோக்கள் டவுன்லோடு செய்யப்பட்டு உள்ளன. அதைத் தொடர்ந்து ஐதராபாத், விஜயவாடா மற்றும் திருப்பதி ஆகியவை உள்ளன.செகந்திராபாத் மற்றும் விஜயவாடா ரயில் நிலையங்களில் மட்டும் இலவச வைஃபை சேவையை பயன்படுத்தி 35 சதவீதம் ஆபாச படங்கள் தரவிறக்கம் செய்யப்பட மற்றும் பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது .

தென் மத்திய ரெயில்வே 588 நிலையங்களுக்கு இணையச் சேவைகளை நீட்டிக்க விரும்பினாலும், ரெயில் நிலையங்களில் இணைய அலைவரிசையின் வேகம் குறைவாக இருப்பதால் இலவச வைஃபையை தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.பெரும்பாலான ஆபாச பட தளங்கள் தடை செய்யப்பட்டுள்ள போதிலும் விபிஎன் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆபாச படங்களை பயனர்கள் தரவிறக்கம் செய்வதாக கூறப்படுகிறது.

Leave your comments here...