நாமக்கல் : தேசிய நெடுஞ்சாலையில் விபத்து – விபத்தை ஆய்வு செய்தபோதே மற்றொரு விபத்தில் சிக்கி போலீஸ்காரர்கள் இருவர் பலி..!

தமிழகம்

நாமக்கல் : தேசிய நெடுஞ்சாலையில் விபத்து – விபத்தை ஆய்வு செய்தபோதே மற்றொரு விபத்தில் சிக்கி போலீஸ்காரர்கள் இருவர் பலி..!

நாமக்கல் : தேசிய நெடுஞ்சாலையில்  விபத்து – விபத்தை ஆய்வு செய்தபோதே மற்றொரு விபத்தில் சிக்கி போலீஸ்காரர்கள் இருவர் பலி..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அணைப்பாளையம் பிரிவு சாலை உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களாக மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதையொட்டி இணைப்புச் சாலை அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து நடந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் திருநெல்வேலியில் இருந்து ஓசூருக்கு சென்ற கார், வாகனங்களை இணைப்புச் சாலைக்கு திசைதிருப்புவதற்காக வைக்கப்பட்டு இருந்த சிறிய இரும்பு டேங்கின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. தகவல் அறிந்த ராசிபுரம் மற்றும் புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் அந்த வழியாக சென்ற லாரி ஒன்றை, சாலையோரம் நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது லாரியின் பின்னால் நின்று கொண்டிருந்த போலீசார்கள் மற்றும் லாரியின் மீது, திருநள்ளாரில் இருந்து சேலம் மாவட்டம் இளம்பிள்ளைக்கு சென்ற சுற்றுலா வேன் ஒன்று அதிவேகமாக வந்து மோதியது.

இதில் புதுச்சத்திரம் போலீஸ் நிலைய சிறப்பு-சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், ராசிபுரம் போலீஸ் நிலைய போலீஸ்காரர் தேவராஜன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். போலீஸ்காரர் தேவராஜன் (வயது 37) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் (55) ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பலியானார்.

அதேபோல் இந்த விபத்தில் மற்றொரு போலீஸ்காரர் மணிகண்டன் மற்றும் சுற்றுலா வேனில் பயணம் செய்த 3 பேரும் காயமடைந்தனர். அவர்கள் 4 பேரும் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று விபத்தில் பலியான போலீஸ்காரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தினார்.

இதனிடையே விபத்தில் பலியான சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகருக்கு, வனிதா என்ற மனைவியும், ஹரிபிரசாத், பார்கவி என்ற மகளும் உள்ளனர். போலீஸ்காரர் தேவராஜனுக்கு, அமுதா என்ற மனைவியும், சுஜித் (8), மோஷிகா (6) என்ற மகளும் உள்ளனர். தேவராஜனின் மனைவி அமுதா மங்களபுரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் டு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று இடங்களில் இதுபோல் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. முறையான தடுப்பு வேலிகள் அமைக்காததாலும், ஒளிரும் ஸ்டிக்கர்கள் முறையாக ஒட்டப்படாதாலும், எச்சரிக்கை பலகைகள் இல்லாததாலும் இரவு நேரங்களில் அதிவேகமாக வரும் வாகனங்கள் தினந்தோறும் விபத்துக்களில் சிக்குவது வாடிக்கையாகவே உள்ளது.

Leave your comments here...