நாகர்கோவில் மாநகராட்சி மேயராக திமுக மகேஷ் : டஃப் கொடுத்த பாஜக – அதிர்ச்சியான திமுக..!

அரசியல்

நாகர்கோவில் மாநகராட்சி மேயராக திமுக மகேஷ் : டஃப் கொடுத்த பாஜக – அதிர்ச்சியான திமுக..!

நாகர்கோவில் மாநகராட்சி  மேயராக திமுக மகேஷ் : டஃப் கொடுத்த பாஜக – அதிர்ச்சியான திமுக..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தமுள்ள 52 வார்டுகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் 22-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், திமுக – 32, பாஜக – 11, அதிமுக – 7, சுயேச்சை – 2 என வெற்றி பெற்றனர்.

இதனால், பாஜகவின் கோட்டையாக கருத்தப்பட்ட நாகர்கோவில் நகரம் திமுகவின் வசம் சென்றது. திமுகவை சேர்ந்த ஒருவர் தான் நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமைக்கு சொந்தகாரராகிரார் என்ற கட்சித் தலைமை மகிழ்ச்சியில் இருந்தது. ஆனாலும், விடாபிடியாக இருந்த பாஜக சுயேச்சை மற்றும் திமுக கவுன்சிலர்கள் சிலர் தன்வசப்படுத்தி மறைமுக தேர்தலில் வெற்றி பெற திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. இதில், திமுக சார்பில் 4வது வார்டு திமுக கவுன்சிலர் மகேஷ், பாஜக சார்பில் 29-வது வார்டு மீனா தேவி ஆகியோர் போட்டியிட்டனர். இதில், திமுக வேட்பாளர் மகேஷ் 28 வாக்குகளும், பாஜக வேட்பாளர் மீனா 24 வாக்குகளும் பெற்றனர். இதனால் மகேஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் 11 இடங்களை மட்டுமே பெற்ற பாஜக மேயர் தேர்தலில் 24 வாக்குகள் பெற்றது . திமுகவினர் இடைய்டையே அதிர்ச்சியை ஏற்அடுத்தியுள்ளது.

அதைத் தொடர்ந்து, தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மகேஷ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். திமுக தொண்டர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடினர். தொடர்ந்து நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மகேஷுக்கு மாநகராட்சி ஆணையாளர் ஆஷா அஜித் செங்கோல் வழங்கி பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave your comments here...