வீர தீர செயல்கள் புரிந்ததற்காக 6 ராணுவ வீரர்களுக்கு ‘சவுரிய சக்ரா’ விருது..!

இந்தியா

வீர தீர செயல்கள் புரிந்ததற்காக 6 ராணுவ வீரர்களுக்கு ‘சவுரிய சக்ரா’ விருது..!

வீர தீர செயல்கள் புரிந்ததற்காக 6 ராணுவ வீரர்களுக்கு ‘சவுரிய சக்ரா’ விருது..!

குடியரசு தினத்தை முன்னிட்டு வீர தீர செயல்கள் புரிந்ததற்காக ராணுவ வீரர்கள் ஆறு பேருக்கு, ‘சவுரிய சக்ரா’ விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின்போது வீர தீர செயல்கள் புரிந்த ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான விருதுகள் நேற்று வழங்கப்பட்டுள்ளன.அதன்படி இந்திய ராணுவத்தின் மூன்றாவது மிக உயரிய விருதான சவுரிய சக்ரா விருது ஆறு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் வீரமரணமடைந்த ஐந்து பேருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதிகளை துணிச்சலுடன் சுட்டு வீழ்த்தி, வீர மரணமடைந்த நைப் சுபேதார் ஸ்ரீஜித், ஹவில்தார் அனில் குமார் தோமர், ஹவில்தார் பின்கு குமார், ஹவில்தார் கஷிரே பம்மநல்லி, செபாய் மருப்ரோலு ஜஸ்வந்த் குமார் ரெட்டி ஆகியோருக்கு சவுரிய சக்ரா விருது மரணத்துக்குப் பின் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர கடந்த ஆண்டு ஜூலையில் இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் ராகேஷ் ஷர்மாவுக்கும் சவுரிய சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் 19 பேருக்கு பரம் விஷிஸ்த் சேவா பதக்கம்; நான்கு பேருக்கு உத்தம் யுத்த சேவா பதக்கம்; 33பேருக்கு அதி விஷிஸ்த் சேவா பதக்கம்; 84 பேருக்கு சேனா பதக்கம் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது.

Leave your comments here...