யானை தந்தங்கள் கடத்தி விற்பனை : 9 பேர் கைது – தந்தங்கள் பறிமுதல்..!

தமிழகம்

யானை தந்தங்கள் கடத்தி விற்பனை : 9 பேர் கைது – தந்தங்கள் பறிமுதல்..!

யானை தந்தங்கள் கடத்தி  விற்பனை :  9 பேர் கைது – தந்தங்கள் பறிமுதல்..!

தேனி மாவட்டம் பெரியகுளம் – வத்தலகுண்டு சாலையில், யானை தந்தங்கள் கடத்தி வந்து விற்பனை செய்ய முயற்சிப்பதாக முன்னாள் வனத்துறை அதிகாரி தேவதானப்பட்டி வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து வனச்சரக அதிகாரி டேவிட் ராஜ் மற்றும் பெரும்பல்லம் வனச்சரக அதிகாரி தலைமையில் 25க்கும் மேற்பட்ட வனத்துறையினர் 3 குழுக்காளாக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தேனி மாவட்ட எலைகை பகுதியில் சந்தேகிக்கும் படி கும்பலாக இருந்தவர்களிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் 2 யானை தந்தங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அங்கு இருந்தவர்களை கைது செய்ய முற்பட்டபோது பெரும்பல்லத்தை சேர்ந்த வனக்காவலர் கருப்பையா என்பவரை அடித்து தள்ளி விட்டத்தில் இடுப்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 2 யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்றதாக தேவதானபட்டி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (35), பிரகாஷ் (29), பாக்கியராசு (30), முத்தையா (57), உசிலம்பட்டியைச் சேர்ந்த சின்னராசு (29), சிவக்குமார் (42), தேனியைச் சேர்ந்த சரத்குமார் (30), விஜயக்குமார் (60) மற்றும் வத்தலகுண்டைச் சேர்ந்த அப்துல்லா (34) ஆகிய 9 நபர்களை கைது செய்து தேவதனப்பட்டி வனச்சரக அலுலகத்தி வைத்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வனக் காவலரை அடித்து தள்ளிவிட்டு தப்பியோடிய சுரேஷ் எனபவரை வனத் துறையினர் தேடி வருகின்றனர்.

Leave your comments here...