2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே புறநகர் ரயிலில் அனுமதி; மாஸ்க் அணியாமல் பயணித்தால் ரூ.500 அபராதம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

தமிழகம்

2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே புறநகர் ரயிலில் அனுமதி; மாஸ்க் அணியாமல் பயணித்தால் ரூ.500 அபராதம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே புறநகர் ரயிலில் அனுமதி; மாஸ்க் அணியாமல் பயணித்தால் ரூ.500 அபராதம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

கடந்த சில நாட்களாகவே நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த 7 மாதங்களில் இல்லாத வகையில் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை நெருங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் 3வது அலை பரவல் தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அந்தவகையில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் அரசு, தனியார் பேருந்துகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டது. எனினும், சென்னை புறநகர் மின்சாரா ரயில்கள் குறைந்தளவு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

அதேபோல், மாதாந்திர அட்டை வைத்திருப்பவர்களுக்கும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்றும் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட பிரிவு அறிவித்துள்ளது. மேலும், புறநகர் ரயிலில் மாஸ்க் அணியாமல் பயணித்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்க் அணியாமல் ரயில் நிலையத்தில் சுற்றினாலும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் புறநகர் ரயிலில் செல்பவர்கள் வருகிற 31-ம் தேதி வரை UTS செயலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஜனவரி 10-ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

Leave your comments here...