தமிழகம் முழுவதும் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல இன்று முதல் தடை.!

தமிழகம்

தமிழகம் முழுவதும் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல இன்று முதல் தடை.!

தமிழகம் முழுவதும் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல இன்று முதல் தடை.!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு பக்தர்கர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இந்நிலையில், கொரோனா பரவல் தீவிரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக இரவு ஊரடங்கு (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார்.

அதன்படி தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. சென்னையில் இரவு நேர ஊரடங்கையொட்டி நகரின் முக்கிய சாலைகள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன.நகரின் முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டன. முக்கிய சாலைகளை இணைக்கும் இணைப்பு சாலைகளும் அடைக்கப்பட்டன. மேம்பாலங்களும் தடுப்புகள் கொண்டு மூடப்பட்டன. பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது.

இரவு 10 மணிக்கு பிறகு வாகனங்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்நிலைமையில், சாலைகளில் திரிந்த சிலர் போலீசாரை கண்டு ஓட்டம் பிடித்தனர். இரவு பணிக்கு செல்வோர் தங்கள் அடையாள அட்டையை காட்டிவிட்டு சாலைகளில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். மருந்தகங்களுக்கு செல்வோர் உள்பட அவசர தேவைகளுக்காக செல்வோரை விசணைக்குப் பின்னரே போலீசார் அனுமதித்தனர்.

இரவு நேர ஊரடங்கையொட்டி கடைகள் அனைத்தும் நேற்று இரவு 9.30 மணிக்குள்ளாகவே மூடப்பட்டன. இதனால் இரவு 10 மணிக்கே நள்ளிரவு நேர அமைதியை காணமுடிந்தது.இரவு ஊரடங்கையொட்டி, நகரை சுற்றிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னையில் 312 இடங்களில் தடுப்புகள் அமைத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். இதேபோல இதர மாவட்டங்களிலும் நேற்று போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் ரோந்து வாகனம், தடுப்புகள் அமைத்தது என 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது.வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்த மூன்று நாட்கள் வழிபாட்டுத் தலங்களில் கூட்டமானது வழக்கத்தைவிட அதிகமாக காணப்படும். இதனால் தொற்று பரவல் அதிகரிக்கக்கூடும் என்பதால் தமிழக அரசு வழிபாட்டு தலங்களுக்கு தடை விதித்துள்ளது.

Leave your comments here...