வைகோ, திருமாவளவன், திமுகவினர், ஈழத்தமிழர்கள் மீது அக்கறை உள்ளது போல் வேசம் போடுகிறார்கள் : அறிக்கை விட்ட ராஜபக்சே மகன் நாமல்..!

அரசியல்

வைகோ, திருமாவளவன், திமுகவினர், ஈழத்தமிழர்கள் மீது அக்கறை உள்ளது போல் வேசம் போடுகிறார்கள் : அறிக்கை விட்ட ராஜபக்சே மகன் நாமல்..!

வைகோ, திருமாவளவன், திமுகவினர், ஈழத்தமிழர்கள் மீது அக்கறை உள்ளது போல் வேசம் போடுகிறார்கள் : அறிக்கை விட்ட ராஜபக்சே மகன் நாமல்..!

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்றார். இலங்கையின் 7-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்சே பதவி ஏற்க உள்ளார். இதற்கு தமிழக தலைவர்கள் ஸ்டாலின் , வைகோ திருமாவளவன், என பலர் புதிய அரசை விமர்சனம் செய்து இருந்தார்கள்.

இந்நிலையில் கோத்தபாய ராஜபக்சே வெற்றி குறித்து எம்.பி. நாமல் ராஜபக்சே தமது ட்விட்டர் பக்கத்தில், எமது ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் ஒர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார் அதில்:-

தமிழகத்தின் சில தமிழ் அரசியல் தலைவர்கள் இலங்கைத் தமிழ் மக்களை பற்றி ஒருபோதும் ஆழமாக சிந்தித்ததும் இல்லை, அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யும் வகையில் எந்த ஒரு ஆக்க பூர்வமான செயற்பாடுகளை செய்ததுமில்லை. மாறாக தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளிற்காக எமது நாட்டு மக்களை பகடைக்காயாக பயன்படுத்துவது தான் மிகுந்த வேதனை தரும் உண்மை.

எமது கட்சியின் சார்பில் போட்டியிட்ட திரு. கோட்டாபய ராஜபக்ச அவர்கள் இலங்கையில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது
பல நாடுகளின் தலைவர்கள், குறிப்பாக பாரதப் பிரதமர் மோடி உள்ளிட்ட பாரதத்தின் பல அரசியல் தலைவர்களும் தமது வாழ்த்துக்களை வழங்கி இருந்தனர்.

 

ஆனால் தமிழகத்தில் தமது சுயநல சந்தர்ப்பவாத அரசியல் தக்க வைப்பதற்காக எமது நாட்டில் தமிழ் மக்களைப்பற்றி அக்கறையுள்ளவர்களாகக் காட்டி முதலைக் கண்ணீர் வடிக்கும் மதிமுக-வின் பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரின் அறிக்கைகளை பார்த்தேன். இது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல் தவிர அவற்றில் வேறேதும் இல்லை எமது மக்களை பகடைக்காய்களாக்கும் எம் மக்களிடையே பகையையும் துவேசத்தையும் தூண்டிவிடும் மூன்றாந்தர அரசியலைத் தவிர வேறு என்ன ஆக்கபூர்வமான விடயத்தை செய்திருக்கிறீர்கள் என்ற கேள்வி என்னுள் எழுவதை என்னால் தடுக்க முடியவில்லை.

திமுக சார்பில் பாராளுமன்றக் குழு
இலங்கை சென்ற ராஜபக்சவுடன் சந்திப்பு.

2009ல் யுத்தம் நிறைவடைந்த காலத்தில் மறைந்த தமிழகத்தின் முதலமைச்சர் மரியாதைக்குரிய கலைஞர் கருணாநிதியின் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாராளுமன்றக் குழு இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு, வடக்கு – கிழக்கு பகுதிகளை பார்வையிட்டதுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் சிநேக பூர்வமான சந்திப்பிலும் ஈடுபட்டிருந்தமை உலகம் அறிந்த விடையம். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டதுடன், எம்முடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், எமது
நிலைப்பாடுகளையும் தெளிவுற அறிந்து கொண்டிருந்தார். அத்தகையவர் இன்று
இவ்வாறு சந்தர்ப்பவாத அறிக்கை விடுவது எமக்கு அதிர்ச்சியாக உள்ளது.

எமது ஜனாதிபதி உட்பட எமது எதிர்கால அரசாங்கமானது அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படைத் தன்மையுடனும், நல்லெண்ணத்துடனும் செயற்படும்.

தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கு நான் அன்புடன் கூறிக்கொள்ள விரும்புவது யாதெனில், நீங்கள் அனைவரும் அறிக்கையில் நிகழ்கால ஜனாதிபதி மற்றும் அரசை விமர்சிப்பதை விட்டு.. விட்டு நடைமுறை அரசியலில் இலங்கைத் தமிழ் மக்களைப் பற்றி சிந்திப்பது சாலச் சிறந்தது.

மேலும் ஊடகங்களில் சுயநல, சந்தர்ப்பவாத அறிக்கைகளை மட்டுமே விட்டு பரபரப்பை
ஏற்படுத்துவதை விடுத்து எமது நாட்டு தமிழ் மக்கள் உளப்பூர்வமாக நேசிக்கும்
தமிழக தலைவர்களாக நீங்கள் இருந்தால், எமது மக்களது எதிர்கால வாழ்வு சுபீட்சமாக அமைய முடிந்த வரை பொறுப்புடன் செயற்படுவது காலத்தின் கட்டாயம் என தமிழகத்தின் அரசியல் தலைவர்களை அன்புடனும், மரியாதையுடனும் கேட்டுக்கொள்கிறேன் எனவும் நாமல் ராஜபக்சே கூறியுள்ளார்.

Leave your comments here...