ஒமைக்ரான்’ வைரஸ் : சர்வதேச விமானங்களை உடனே நிறுத்துங்கள் – பிரதமர் மோடிக்கு டில்லி முதல்வர் கெஜ்ரிவால் வேண்டுகோள்

இந்தியா

ஒமைக்ரான்’ வைரஸ் : சர்வதேச விமானங்களை உடனே நிறுத்துங்கள் – பிரதமர் மோடிக்கு டில்லி முதல்வர் கெஜ்ரிவால் வேண்டுகோள்

ஒமைக்ரான்’ வைரஸ் : சர்வதேச விமானங்களை உடனே நிறுத்துங்கள் – பிரதமர் மோடிக்கு டில்லி முதல்வர் கெஜ்ரிவால் வேண்டுகோள்

புதிய உருமாற்ற வைரஸான ஒமைக்ரான் மிகத் தீவிரமான அளவில் உலகளாவிய ஆபத்தை ஏற்படுத்தும். அது அலையாக பரவும்போது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஒமைக்ரான் பற்றிய கவலைகள் அதிகரித்துவரும் நிலையில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாவது: ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து விமானங்களை பல நாடுகள் கட்டுப்படுத்தியுள்ளன. நாம் ஏன் தாமதிக்கிறோம்? புதிய உருமாற்ற வைரஸின் பரவலைச் சரிபார்க்க இஸ்ரேல், ஜப்பான் விரிவான பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

முதல் அலையிலும், நாம் விமானங்களுக்கான தடையை தாமதப்படுத்தினோம். பெரும்பாலான சர்வதேச விமானங்கள் டில்லியில் தரையிறங்குகின்றன. மேலும் இந்நகரம் மிகவும் பாதிக்கப்படும். தயவுசெய்து சர்வதேச விமானங்களை பிரதமர் மோடி உடனடியாக நிறுத்த வேண்டும். இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவும், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், ”பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். எந்த தாமதமும் மிகவும் தீங்கு விளைவிக்கும்,” என்று வலியுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நுழைவு விதிகளில், ”இந்தியாவிற்கு வரும் ஒவ்வொரு சர்வதேச பயணிகளும் சுய அறிவிப்பு படிவத்தை பூர்த்தி செய்து எதிர்மறையான ஆர்.டி.பி.சி.ஆர்., சோதனை அறிக்கையை காட்ட வேண்டும்,” என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...