வறண்டு போன தடுப்பணை : தண்ணீர் திறக்க வேண்டி 10008 விளக்குகளை ஏற்றிய விவசாயிகள்..!

தமிழகம்

வறண்டு போன தடுப்பணை : தண்ணீர் திறக்க வேண்டி 10008 விளக்குகளை ஏற்றிய விவசாயிகள்..!

வறண்டு போன தடுப்பணை : தண்ணீர் திறக்க வேண்டி 10008 விளக்குகளை ஏற்றிய விவசாயிகள்..!

கடந்த 1980ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள உத்தமபாளையத்தில் வட்டமலை ஓடையின் குறுக்காக,600 ஏக்கர் பரப்பளவில் 6050 ஏக்கர் பாசனம் பெறும் வகையில் 30 அடி உயரத்துக்கு தடுப்பணை கட்டப்பட்டது.

அதன் பின் இரண்டு முறை மட்டுமே இந்த அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், கடந்த 1985ம் ஆண்டு முதல் அணைக்கு தண்ணீர் வரத்து இன்றியும், பி.ஏ.பி பாசன தொகுப்பில் இருந்து உபரி நீர் திறக்க அரசாணை இருந்தும் தண்ணீர் திறக்கப்படாததால் கடந்த 30 ஆண்டுகளாக அணை வறண்டு காட்சிப்பொருளாக உள்ளது.

இது குறித்து வட்டமலை அணைக்கு தண்ணீர் விடக்கோரி கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகள் பல்வேறு கட்ட அறவழி போராட்டங்கள் நடத்தியும், கடந்த 10 ஆண்டுகளில் பல முறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிகையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், திருகார்த்திகை தீபத்தை முன்னிட்டு, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும்,அணைக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் அணைப் பகுதியை சுற்றி உள்ள 10 கிராமங்களை சேர்ந்த சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அணைப்பகுதி முழுவதும் 10008 தீபங்களை ஏற்றி அறவழி கவன ஈர்ப்பில் ஈடுப்பட்டனர்.

Leave your comments here...