ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 12 பேருக்கு கேல் ரத்னா விருது வழங்கினார் ஜனாதிபதி..!

இந்தியாவிளையாட்டு

ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 12 பேருக்கு கேல் ரத்னா விருது வழங்கினார் ஜனாதிபதி..!

ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 12 பேருக்கு கேல் ரத்னா விருது வழங்கினார் ஜனாதிபதி..!

இந்திய விளையாட்டு துறையில் சாதிப்பவர்களுக்கு மத்திய அரசு சார்பில் தயான்சந்த் ‘கேல் ரத்னா’, ‘அர்ஜுனா’ உள்ளிட்ட விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். இவ்விருதுகளுக்கான தேர்வுக்குழு பரிந்துரை செய்த பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா : இதன்படி, ஒலிம்பிக் தடகள வரலாற்றில் சாதித்து முதன் முறையாக இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ரவிக்குமார் (மல்யுத்தம், வெள்ளி), லவ்லினா (குத்துச்சண்டை, வெண்கலம்), பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெஹரா, மணிஷ் நார்வல் (துப்பாக்கிசுடுதல்), சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்), பிரமோத், கிருஷ்ணா (பாட்மின்டன்), கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் (ஹாக்கி), இந்திய பெண்கள் ஒருநாள் அணி கேப்டன் மிதாலி ராஜ், சுனில் செத்ரி (கால்பந்து), மன்பிரீத் சிங் (ஹாக்கி) , பிரமோத் பகத்(பாரா பாட்மின்டன் வீரர்) உள்ளிட்ட 12 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கி கவுரவித்தார்.

அர்ஜூனா விருது : ஹாக்கி வீராங்கனைகள் மோனிகா, வந்தனா கட்டாரியா , கபடி வீரர் சந்தீப் நர்வால், துப்பாக்கி சுடும் வீரர் அபிசேக் வர்மா, கிரிக்கெட் வீரர் ஷிகார் தவான், பாட்மின்டன் வீரரும், கவுதம புத்தா நகர் கலெக்டர் சுகாஷ் உள்ளிட்ட 35 பேருக்கு ஆகியோருக்கும் அர்ஜூனா விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்.

Leave your comments here...