இன்னும் பல பத்தாண்டுகளுக்கு பாஜகவை யாராலும் அசைக்க முடியாது – மோடியை தோற்கடிக்க ராகுல்காந்தியால் முடியாது – தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்

அரசியல்இந்தியா

இன்னும் பல பத்தாண்டுகளுக்கு பாஜகவை யாராலும் அசைக்க முடியாது – மோடியை தோற்கடிக்க ராகுல்காந்தியால் முடியாது – தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்

இன்னும் பல பத்தாண்டுகளுக்கு  பாஜகவை யாராலும் அசைக்க முடியாது – மோடியை தோற்கடிக்க ராகுல்காந்தியால் முடியாது – தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்

பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், தேர்தல்களில் அரசியல் கட்சிகள் வெற்றி பெற வியூகம் வகுத்து கொடுத்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெற வியூகம் வகுத்து அளித்தார்.

இந்த ஆண்டு, மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கும், தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கும் பணியாற்றினார். இரு கட்சிகளுமே ஆட்சியை பிடித்தன. இதைத்தொடர்ந்து, 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பணியாற்ற பிரசாந்த் கிஷோர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், காங்கிரசை மறுசீரமைக்க தன்னை சுதந்திரமாக அனுமதிக்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் விரும்பியதால், இந்த பேச்சுவார்த்தை முறிந்ததாக தெரிகிறது.

அதே சமயத்தில், திரிணாமுல் காங்கிரசுக்காக பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். கோவா சட்டசபை தேர்தலையொட்டி, திரிணாமுல் காங்கிரசுக்கு ஆலோசனை வழங்க கோவா சென்ற அவர், அங்கு விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அவர் கூறியதாவது:- பாஜக, இன்னும் பத்தாண்டுகள் இந்திய அரசியலின் மையமாக இருக்கும். அக்கட்சி வெற்றி பெற்றாலும் சரி, தோற்றாலும் சரி, சுதந்திரம் பெற்ற முதல் 40 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி எப்படி இருந்ததோ, அதேபோல் பாஜகவும் இருக்கும். பாஜக எங்கும் போய்விடாது. தேசிய அளவில் 30 சதவீதத்துக்கு மேல் ஓட்டு வாங்கி இருக்கும்போது, பாஜக வீழ்ந்து விடும் என்று அவசரப்பட்டு கருத வேண்டாம். எனவே, மக்கள் கோபம் அடைந்து மோடியை தூக்கி எறிந்து விடுவார்கள் என்ற மாயவலைக்குள் விழ வேண்டாம்.

அவர்கள் மோடியை வேண்டுமானால் தூக்கி எறியலாம். ஆனால் பாஜக இங்குதான் இருக்கும். எங்கும் போய்விடாது. இன்னும் பல ஆண்டுகளுக்கு அக்கட்சியுடன் போட்டியிட்டுத்தான் ஆக வேண்டும். இதை புரிந்துகொள்ள மறுப்பதுதான் ராகுல்காந்தியிடம் உள்ள பிரச்சினை. ஒரு காலகட்டத்தில் மோடியை மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள் என்று அவர் நினைக்கிறார். ஆனால் அது நடக்கப்போவதில்லை.

மோடியின் வலிமையை ஆராய்ந்து, புரிந்து, கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்படாதவரை, மோடியை தோற்கடிக்கும் அளவுக்கு ஒரு போட்டியை உருவாக்க ராகுல்காந்தியால் ஒருபோதும் முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...