ரவுடிகளை ஒடுக்க ‛திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு வரைவு மசோதா – ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

தமிழகம்

ரவுடிகளை ஒடுக்க ‛திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு வரைவு மசோதா – ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

ரவுடிகளை ஒடுக்க ‛திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு வரைவு மசோதா – ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

ரவுடிகளை ஒடுக்க, ‛திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு வரைவு மசோதா’ தயாராக உள்ளதாகவும், அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் எனவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை அயனாவரம் ரவுடி ஜோசப் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வேலு என்பவர், தன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது.

அப்போது, ரவுடிகள், அரசியல்வாதிகள் என, எல்லோரிடமும் சட்ட விரோத ஆயுதங்கள் இருப்பதாகவும், ரவுடிகளால் போலீசார் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்க, கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டுமென, நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு சட்ட மசோதா தயாராக உள்ளதாகவும், அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இது சட்டமாக இயற்றப்படும் எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், இந்த மசோதா சட்டமாக இயற்றப்பட்டால் ரவுடிகளை கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

Leave your comments here...