கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.!

தமிழகம்

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.!

திருவண்ணாமலையில் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு தலா 1 லிட்டர் பெட்ரோல், தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் என வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைப்பெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு தனியார் ஓட்டுனர் பயிற்சி அசோசியேசன் சார்பில் தலா 1 லிட்டர் பெட்ரோல், அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் மற்றும் பிஸ்கெட் பாக்கெட் வழங்கப்பட்டது. இந்த முகாமை ஆய்வு செய்ய வந்த கலெக்டர் முருகேஷ் பெட்ரோல் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளி அசோசியேசன் நிர்வாகிகளை பாராட்டினார்.

Leave your comments here...