டெல்டா கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி – சீனாவில் பள்ளிகள் மூடல்.!

உலகம்

டெல்டா கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி – சீனாவில் பள்ளிகள் மூடல்.!

டெல்டா கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி – சீனாவில் பள்ளிகள் மூடல்.!

சீனாவின் பல்வேறு நகரங்களிலும் கொரோனா தொற்று பள்ளி குழந்தைகளுக்கு பாதித்துள்ளதால், அங்கு பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது.

உலகில் கொரோனா பாதிப்பு முதன்முதலில் சீனாவில் உள்ள ஒரு நபருக்கு தான் கண்டறியப்பட்டது. ஒரு சில மாதங்களில் உலகின் அனைத்து பகுதியிலும் தொற்று பாதிப்பு பரவ ஆரம்பித்து விட்டது. தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த பல நாடுகளும் தொடர்ந்து கடும் சிரமங்களை சந்தித்தது. தீவிர ஆய்வின் விளைவால் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியப்பட்டது.

உலகில் கொரோனா பாதிப்பு முதன்முதலில் சீனாவில் உள்ள ஒரு நபருக்கு தான் கண்டறியப்பட்டது. ஒரு சில மாதங்களில் உலகின் அனைத்து பகுதியிலும் தொற்று பாதிப்பு பரவ ஆரம்பித்து விட்டது. தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த பல நாடுகளும் தொடர்ந்து கடும் சிரமங்களை சந்தித்தது. தீவிர ஆய்வின் விளைவால் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியப்பட்டது.

இந்நிலையில் தென் சீனப் பகுதியில் புஜியான் மாகாணத்தில் புட்டியான் நகருக்கு அண்மையில் சிங்கப்பூரில் இருந்து திரும்பிய நபர் ஒருவருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் மூலம் 100க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அவரது பள்ளி செல்லும் மகனுக்கும் தொற்று ஏற்பட அந்தச் சிறுவன் மூலமாக 36 குழந்தைகளுக்குப் பரவியது. சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து பள்ளிகளில் இந்த அளவுக்கு தொற்று பரவியது இதுவே முதன்முறை.

நேற்று மட்டும் புதிதாக 59 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இப்போது டெல்டா வைரஸ் வேகமெடுக்கும் சூழலில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படக் கூடிய இலக்கு என்று சீனா அஞ்சுகிறது. எனவே புட்டியான் நகரில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. அருகில் உள்ள சியாமென் நகரில் பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் பரிசோதனை செய்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள சீன தூதரகம், சீன மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மீண்டும் கொரோனா பரவுவதால் மக்கள் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளது.

Leave your comments here...