காபூல் விமான நிலையம் அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் – 73 பேர் பலி

உலகம்

காபூல் விமான நிலையம் அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் – 73 பேர் பலி

காபூல் விமான நிலையம் அருகே  மனித வெடிகுண்டு தாக்குதல் – 73 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் வாயிலில், இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 12 அமெரிக்க கடற்படை வீரர்கள் உட்பட, 73 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெற்காசிய நாடான காபூலை, தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றிய பின், அந்நாட்டில் இருந்து வெளியேறுவதற்காக தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் குவிந்த வண்ணம் உள்ளனர்.

காபூல் விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக, ஆப்கனில் உள்ள அமெரிக்க துாதரகம் எச்சரிக்கை விடுத்தது. காபூல் விமான நிலையத்தின் மூன்று வாயில்களில் இருந்தும் அமெரிக்கர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி எச்சரித்தது.

பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களும் காபூல் விமான நிலையம் தாக்கப்பட வாயப்புள்ளதாக எச்சரித்து வந்தனர். இந்நிலையில் காபூல் விமான நிலையத்தில் 4 இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

விமான நிலையத்திற்கு வெளியே அபே கேட் அருகே முதல் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில், விமானம் ஏற அமெரிக்கர்கள் காத்திருக்கும் பகுதியான பரோன் ஹோட்டல் கேட் அருகே அடுத்த குண்டு வெடித்தது. இதையடுத்து அடுத்த சில மணி நேரத்தில், விமான நிலையத்தின் அருகில் மேலும் இரு குண்டுகள் வெடித்தன.

இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில், குழந்தைகள் உட்பட 73 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளன. இதில் 12 அமெரிக்க கடற்படை வீரர்கள் பலியானதாக அமெரிக்க அதிபர் பைடன் உறுதிப்படுத்தி உள்ளார். 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதால் உயிர் பலி மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் கோரோசான் பிரிவு (ஐ.எஸ்.கே.பி.,) பொறுப்பேற்றுள்ளது.

Leave your comments here...