அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட ‘குவாட்’ நாடுகளின் மலபார் கூட்டு போர் பயிற்சி..

இந்தியாஉலகம்

அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட ‘குவாட்’ நாடுகளின் மலபார் கூட்டு போர் பயிற்சி..

அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட ‘குவாட்’ நாடுகளின் மலபார் கூட்டு போர் பயிற்சி..

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைகளுடன் ஆகஸ்ட் 26-29 வரை நடைபெறும் மலபார் கூட்டுப் பயிற்சியில் இந்திய கடற்படை கலந்து கொண்டுள்ளது.

இந்தியா மற்றும் அமெரிக்காவின் கடற்படைகளுக்கு இடையே நடைபெறும் பயிற்சியாக மலபார் கூட்டுப் பயிற்சி கடந்த 1992-ஆம் ஆண்டு தொடங்கியது. 2015-ஆம் ஆண்டு, இந்தப் பயிற்சியின் நிரந்தர உறுப்பினராக ஜப்பான் கடற்படையும் இணைந்தது. அதன்பிறகு 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற பயிற்சியில் ஆஸ்திரேலிய கடற்படையும் சேர்ந்தது. மேற்கு பசிபிக் கடல் பகுதியில் 25-ஆவது மலபார் கூட்டுப் பயிற்சியை அமெரிக்கா நடத்துகிறது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அது சுதந்திரமான, வெளிப்படையான பிராந்தியமாக நீடிக்கும்வகையில், 4 நாடுகளும் ஒத்துழைப்பை அளிப்பதற்காக, இந்த பயிற்சி நடக்கிறது. அமெரிக்க கடற்படை இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதில், 4 நாடுகளின் போர் கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை பங்கேற்று சிக்கலான பயிற்சிகளில் ஈடுபடுகின்றன. இந்திய கடற்படை தனது ஐ.என்.எஸ்.சிவாலிக் போர்க்கப்பல், நீர்மூழ்கி தகர்ப்பு கப்பலான ஐ.என்.எஸ். கட்மட், கடல்சார் உளவு விமானம் ஆகியவற்றை பயிற்சியில் பங்கேற்க வைத்துள்ளது.

Leave your comments here...