புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி – தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம்

புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி – தமிழக அரசு அறிவிப்பு

புதிய  ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி – தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா தொற்றால் செயல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துன்பங்களை போக்குவதற்கு, அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் முதல் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருந்தார்.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, நோய்ப் பரவலைத் தடுக்கும் பொருட்டு, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொரோனா நோய் தொற்றின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும், பெருந்தொற்று நேரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், ரூ.4,153.39 கோடி செலவில், இந்த மே மாதத்தில் 2 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரத்து 950 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகையை முதல் தவணையாக வழங்க ஏற்கனவே முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தற்போது நடைமுறைக்கு வந்துள்ள 2 லட்சத்து 14 ஆயிரத்து 950 புதிய அரிசி ரேஷன் அட்டைகளை பெற்றுள்ள ரேஷன் அட்டைதாரர்களின் வாழ்வாதாரத்திற்கும் மேற்கூறப்பட்ட உதவியை வழங்கிடும் வகையில், ரூ.42.99 கோடி செலவில் இந்த மாதத்தில் ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகையை முதல் தவணையாக வழங்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...