ஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.!

இந்தியா

ஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.!

ஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.!

ஐதராபாத் நேரு உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. ஐதராபாத், நேரு உயிரியல் பூங்காவில் உள்ள 8 சிங்கங்களுக்கு சுவாச பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டன.

இதையடுத்து அந்த சிங்கங்களுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு கடந்த ஏப்ரல் 24ம் தேதி அன்று சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி படுத்தப்பட்டதாக இந்த பரிசோதனையை மேற்கொண்ட சிசிஎம்பி-லாகோன்ஸ் மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த தொற்று மாறுபட்ட வகை கொரோனா அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் பாதிப்புக்கு உள்ளான 8 சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவை குணமடைந்து வருகின்றன.

தற்போது அவை இயல்பாக நடமாடி, நன்கு சாப்பிடுவதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரியல் பூங்காவில் தடுப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே அமலில் உள்ளன. தொற்று பாதிப்பை குறைப்பதற்காக உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்கு மூடப்பட்டுள்ளது.கொவிட் பாதிப்பு அதிகரித்துள்ளதால், உயிரியல் பூங்காக்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், அனைத்து உயிரியல் பூங்காக்களுக்கும் வழங்கியுள்ளது.

Leave your comments here...