கல்வி அறிவை வலுப்படுத்த இளைஞர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்துங்கள்: குடியரசு துணைத் தலைவர்

இந்தியா

கல்வி அறிவை வலுப்படுத்த இளைஞர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்துங்கள்: குடியரசு துணைத் தலைவர்

கல்வி அறிவை வலுப்படுத்த இளைஞர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்துங்கள்: குடியரசு துணைத் தலைவர்

அடிப்படை கல்வியறிவை வலுப்படுத்துவதற்காக வாசிக்கும் பழக்கத்தை சிறுவயது முதலே குழந்தைகளிடம் விதைக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

குழந்தைகளிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.குழந்தைகளின் பழக்கவழக்கங்களை மேம்படுத்துவதற்கும் மின்னணு உபகரணங்களை அதிக அளவில் அவர்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்கும் வாசிப்பு பழக்கம் அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அடிக்காபி சரளா தாசின் 600-வது பிறந்த நாள் விழாவில் பேசிய குடியரசு‌ துணைத் தலைவர், பிரத்தியேக அமைப்பு மற்றும் நடையின் காரணமாக சரளா தாசால் எழுதப்பட்ட மகாபாரதம் நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு பிறகும் ஒடியா மக்களால் பெரிதும் மதிக்கப்படுகிறது என்று கூறினார்.எளிய, புரியும் நடையில் மக்களுடன் உரையாடுவதற்கான முக்கியத்துவத்தை இது பிரதிபலிப்பதாகவும் கூறினார்.

குழந்தைகளுக்கான புத்தகங்களை அதிகளவில் எழுத்தாளர்கள் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்ட குடியரசு துணைத் தலைவர், நிர்வாகம், நீதி மற்றும் கல்வி ஆகிய துறைகளில் உள்ளூர் மொழியை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். பள்ளிகளில் ஆரம்பக் கல்வி தாய்மொழியில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் தாய்மொழியில் கல்வி கற்பிக்கப் படுவதால் உண்டாகக்கடிய நன்மைகள் குறித்து ஆராய்ச்சிகள் தெளிவுபடுத்தி உள்ளதாகவும் கூறினார்.

சரளா தாஸ் ஒரு இலக்கிய பேராளுமை என்றும் ஒடியா மொழியின் தந்தை எனும் பட்டத்தை அவர் பெற்றுள்ளதாகவும் குடியரசு துணைத் தலைவர் புகழாரம் சூட்டினார்.

Leave your comments here...