சட்டவிரோதமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் முடி காணிக்கை சீனாவுக்கு கடத்தல்?

இந்தியா

சட்டவிரோதமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் முடி காணிக்கை சீனாவுக்கு கடத்தல்?

சட்டவிரோதமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் முடி காணிக்கை சீனாவுக்கு கடத்தல்?

திருப்பதியில், நாட்டின் பணக்காரக் கோவிலாகக் கருதப்படும் திருமலை ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலை, திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது.வழிபாட்டு தலங்களில் கடவுளுக்கான நன்றி கடன் செலுத்துவதில் முதன்மையான ஒன்று பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவது. அந்த வகையில் தினம்தோறும் திருப்பதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

அவ்வாறு பெறப்படும் தலைமுடி 6 வகையாக தரம் பிரிக்கப்பட்டு நன்றாக அலசி, உலர வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இவை 3 மாதங்களுக்கு ஒருமுறை இ-டெண்டர் மூலம் ஏலம் விடப்பட்டு வெளிநாட்டை சேர்ந்தவர்களால் அதிகளவில் ஏலம் எடுக்கப்படுகிறது. இதனை ஒரு குறிப்பிட்ட கும்பல் மட்டுமே செய்வதாகவும் சமீபத்தில் புகார் எழுந்தது.

மேலும் தலைமுடிகள் அனைத்தும் சீனா, இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மிசோரம் அருகேயுள்ள சீன எல்லையில் வாகனங்களை அசாம் ஆயுதப் படையினர் தணிக்கை செய்தனர்.

அப்போது சரக்கு லாரி ஒன்றில் 120 தலைமுடி மூட்டைகள் பிடிபட்டன. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் இவை அனைத்தும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கியவை என தெரியவந்தது. இது ஆந்திர அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

திருப்பதி கோவிலில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்படும் தலைமுடி, தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மர், தாய்லாந்து வழியாக, சீனாவுக்கு கடத்தப்பட்டு, ‘விக்’ தயாரிக்க பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.’இந்த கடத்தலுக்கு, தேவஸ்தான அறக்கட்டளை அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர். மிசோரமில் கைப்பற்றப்பட்ட தலைமுடியின் மதிப்பு, 2 கோடி ரூபாய் இருக்கும்’ என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இதுதொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த நிர்வாகி அய்யண்ண பாத்ருடு காணிக்கை முடிகளை கூட முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விட்டுவைக்கவில்லை என கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விவகாரம் தொடர்பாக, வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யும்படி, பா.ஜ., தேசிய செயலர் சுனில் தியோரா தெரிவித்து உள்ளார். திருப்பதி லோக்சபா தொகுதிக்கு, இம்மாதம், 17ல் இடைத்தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, இந்த தலைமுடி கடத்தல் விவகாரம், பிரசாரத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

Leave your comments here...