இந்தியாவிடம் இருந்து 30 ஆண்டுக்கு பிறகு அரிசியை வாங்கும் சீனா.!

இந்தியாஉலகம்

இந்தியாவிடம் இருந்து 30 ஆண்டுக்கு பிறகு அரிசியை வாங்கும் சீனா.!

இந்தியாவிடம் இருந்து 30 ஆண்டுக்கு பிறகு அரிசியை வாங்கும் சீனா.!

இந்தியாவிடம் இருந்து அரிசிஇறக்குமதி செய்ய, 30 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா முடிவு செய்துள்ளது.

லடாக் எல்லையில் சீன வீரர்கள் ஊடுருவி தாக்குதல் நடத்திய பிறகு, அந்த நாட்டுக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கைகள் எடுத்தது. சீன செயலிகள் தடை செய்யப்பட்டன. அந்நிய நேரடி முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது. குறிப்பாக பாசுமதி அரிசி அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2019 – 20 நிதி ஆண்டில் ரூ.31 ஆயிரம் கோடிக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி ஆகியுள்ளது. இந்த நிதி ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் பாசுமதி இல்லாத அரிசி ரூ.8,903 கோடிக்கு ஏற்றுமதி ஆகியிருக்கிறது.

அதே போல் உலகளவில் அதிக அரிசி இறக்குமதி செய்யும் நாடாக சீனா உள்ளது. 40 லட்சம் டன் அரிசியை ஆண்டுதோறும் இறக்குமதி செய்கின்றது. ஆனால் இந்திய அரிசி தரமில்லை என காரணம் காட்டி பல ஆண்டு காலமாக வாங்காமல் இருந்தது. தாய்லாந்து, வியட்நாம், மியான்மர் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வந்தது.

தற்போது அந்நாடுகளில் விளைச்சல் குறைந்ததால் வரத்தும் குறைந்துள்ளது. முக்கிய அரிசி ஏற்றுமதி நாடான தாய்லாந்தில் வறட்சி நிலவுகிறது. இதனால் சீனாவுக்கு தேவையான அரிசி கிடைக்கவில்லை. எனவே இந்தியாவிடமிருந்து பல ஆண்டுகளுக்கு பிறகு அரிசி இறக்குமதி செய்து வருகிறது. ஒரு லட்சம் டன் அரிசி இறக்குமதிக்கு சீன ஒப்பந்தம் செய்துள்ளதாக அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம் கூறியுள்ளது. ஒரு டன் சுமார் ரூ.22,000 என்ற குறைந்த விலைக்கு தருகின்றனர். தரத்தை பார்த்த பிறகு அடுத்த ஆண்டு இன்னமும் கூடுதலாக இறக்குமதி செய்வார்கள் என தெரிவிக்கின்றனர்

Leave your comments here...