இ-சஞ்சீவனி திட்டத்தின் மூலம் 8 லட்சம் மருத்துவ ஆலோசனைகள் : நாட்டிலேயே தமிழகம் தொடர்ந்து முன்னிலை

இந்தியாதமிழகம்

இ-சஞ்சீவனி திட்டத்தின் மூலம் 8 லட்சம் மருத்துவ ஆலோசனைகள் : நாட்டிலேயே தமிழகம் தொடர்ந்து முன்னிலை

இ-சஞ்சீவனி திட்டத்தின் மூலம் 8 லட்சம் மருத்துவ ஆலோசனைகள் : நாட்டிலேயே தமிழகம் தொடர்ந்து முன்னிலை

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இ-சஞ்சீவனி தளத்தில் 8 லட்சத்துக்கும் (8,00,042) அதிகமான தொலைதூர மருத்துவ ஆலோசனைகள் இதுவரை நாடு முழுவதும் வழங்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

இ-சஞ்சீவனி வெளிநோயாளி பிரிவு தற்போது 7500-க்கும் அதிகமான மருத்துவர்களுடன் 220 ஆன்லைன் வெளிநோயாளர் பிரிவு சேவைகளை வழங்குகிறது.

கொவிட்-19 பெருந்தொற்றின் போது பயனாளிகளின் உடல் இடைவெளியை உறுதி செய்து, பல்வேறு அத்தியாவசிய மருத்துவ சேவைகளை இ-சஞ்சீவனி வழங்கியுள்ளது. மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கைபேசி செயலியை 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் 2,59,904 தொலைதூர ஆலோசனைகளும், உத்தரப் பிரதேசத்தில் 2,19,715 தொலைதூர ஆலோசனைகளும், கேரளாவில் 58,000-மும், இமாச்சலப் பிரதேசத்தில் 46,647-ம், மத்தியப் பிரதேசத்தில் 43,045-ம் இ-சஞ்சீவனி தளத்தின் மூலம் நடைபெற்றுள்ளன.

Leave your comments here...