யாரையும் ஆக்கிரமிக்க விடமாட்டோம் – மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

இந்தியா

யாரையும் ஆக்கிரமிக்க விடமாட்டோம் – மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

யாரையும் ஆக்கிரமிக்க விடமாட்டோம் – மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

மாநிலங்களவையில் லடாக் பிரச்சினை தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்து பேசினார். அப்போது பேசிய அவர், “நமது நாட்டை யாரையும் ஆக்கிரமிக்க விடமாட்டோம்” என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக பேசிய அவர், எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என இந்தியாவும், சீனாவும் விரும்புகின்றன. எல்லை வரையறை செய்வது குறித்து இரு நாடுகளும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்தியா சீன எல்லையில், அருணாச்சல பிரதேசத்தில் 90 ஆயிரம் சதுர கி.மீ., பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்தியாவின் எல்லையை பாதுகாக்கும் பணியில், கடந்த ஜூன் 15ம் தேதி கல்வன் பகுதியில் நடந்த மோதலில் ராணுவ அதிகாரி சந்தோஷ்பாபு உள்ளிட்ட 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

சீனாவின் செயல், இருநாட்டு ஒப்பந்தங்களை அந்நாடு மதிக்கவில்லை என்பதை காட்டுகிறது. சீன ராணுவத்தன் நடவடிக்கை 1993 மற்றும் 1996 ஒப்பந்தங்களுக்கு எதிரானது. எல்லை பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவுவதற்காக எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியை மதிக்க வேண்டும். இந்த ஒப்பந்தங்களை நமது ராணுவம் உறுதியாக மதிக்கிறது. ஆனால், சீன தரப்பு அதனை பின்பற்றவில்லை. எல்லை பகுதியில் சீனா உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டதுடன், ராணுவத்தை குவித்து வருகிறது. நமது பகுதியில் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், மத்திய அரசு பட்ஜெட்டில் இரு மடங்கு நிதி ஒதுக்கியது.தற்போதைய சூழ்நிலையை அமைதியாக தீர்க்க இந்தியா உறுதிபூண்டுள்ளது. அதே நேரத்தில் எந்த சவாலையும் சந்திக்க, தயாராக உள்ளோம். நமது நாட்டை யாரையும் ஆக்கிரமிக்க விட மாட்டோம்.

Leave your comments here...