விநாயகர் சதுர்த்திக்கு செய்யப்பட்ட விநாயகர் சிலை நீதிமன்ற உத்தரவு பெற்று விநாயகர் ஊர்வலமாக சென்று கரைப்பு.!

தமிழகம்

விநாயகர் சதுர்த்திக்கு செய்யப்பட்ட விநாயகர் சிலை நீதிமன்ற உத்தரவு பெற்று விநாயகர் ஊர்வலமாக சென்று கரைப்பு.!

விநாயகர் சதுர்த்திக்கு செய்யப்பட்ட விநாயகர் சிலை நீதிமன்ற உத்தரவு பெற்று விநாயகர் ஊர்வலமாக சென்று கரைப்பு.!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் ஆண்டு தோறும் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்க்காக பிரமாண்டமான விநாயகர் சிலை செய்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பினால் ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் விநாயகர் சதுர்த்தி விழா பிரமாண்டமான கொரோனா தொற்று போன்ற விநாயகர் சிலைகள் செய்யப்பட்டது ஆனால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தமிழக அரசு தடை உத்தரவு விதித்திருத்தது.இருப்பினும் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க கோரி வழக்கு தொடுத்தார். நீதிபதிகள் கொரோணா காரணமாக அனுமதிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

தற்போது கொரோனா தாக்கம் குறைந்தால் தமிழக அரசு பேருந்து வழிபாட்டுத்தலங்கள் போன்றவைகள் செயல்பட உத்தரவிட்ட நிலையில் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் செய்யப்பட்ட பிரம்மாண்டமான விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி வேண்டி மீண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளை நாடி நிலையில் அரசு விதிமுறைப்படி ஒத்துழைப்பு கொடுத்து விநாயகர் சிலை கரைக்க அனுமதி வழங்கியது.

இதனைத் தொடர்ந்து இன்று மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத்தினர் வடிவமைத்த விநாயகர் சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்து சென்று புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள கண்மாயில் கரைக்க கொண்டு சென்றார் இந்த ஊர்வலத்திற்க்கு நூற்றுக்கு மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Leave your comments here...