நடைபயிற்ச்சி சென்ற ஒய்வு பெற்ற ரயில்வே ஊழியர் : கத்தியால் மண்டையில் வெட்டி செல்போன் பறிப்பு ..!
![நடைபயிற்ச்சி சென்ற ஒய்வு பெற்ற ரயில்வே ஊழியர் : கத்தியால் மண்டையில் வெட்டி செல்போன் பறிப்பு ..!](https://www.jananesan.com/wp-content/uploads/2020/08/செல்வம்.jpeg)
மதுரையில் நடைபயிற்ச்சி சென்ற ஒய்வு பெற்ற ரயில்வே ஊழியரை கத்தியால் மண்டையில் வெட்டி விலை உயர்ந்த செல்போன் பறிப்பு
மதுரை மாடக்குளம் பெரியார் குறுக்கு தெரு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் செல்வம் வயது 62 இரயில்வே துறையில் டெக்னிசனாக வேலை செய்து ஒய்வு பெற்றவர். இவர் மாடக்குளம் மெயின் ரோட்டில் வழக்கமாக அதிகாலையில் நடைப்பயிற்சி செய்து விட்டுக்கு தேவையான பால் வாங்கி வரும் பொழுது பின் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம திருடர்கள் அரசு முதுகலை பட்டதாரி மாணவர் விடுதி அருகே ரோட்டில் நடந்து சென்றவரை கத்தியால் மண்டையில் வெட்டியதால் நிலை குழைந்துது கிழோ விழுந்தார்.
அவரிடன் விலை உயர்ந்த செல்போன் பறிக்கும் போது பாதிக்கப்பட்ட செல்வம் இரண்டு மர்ம நபர்களையும் தரையில் கிடந்தஇரு சக்கர வாகன டையரை எடுத்து இரண்டு பேரையும் அடி பின்னி எடுத்து விட்டார் இருந்தாலும் செல்போனை மீட்க முடிய வில்லை திருடர்கள் செல்போனை பரித்து சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் வசித்து வரும் சமுக ஆர்வளர் சம்பந்தப்பட்ட S.S. காலனி குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் சக்கரவர்திக்கு தகவல் தெரிவித்தனத அடுத்து சம்ப இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட வரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அப்பகுதி ழுழுவதும் திவிர விசாரனை செய்து சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
Leave your comments here...