திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆடி மாத கார்த்திகை விழா ரத்து – கோவில் நிர்வாகம் அறிவிப்பு

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி மாத கார்த்திகை விழா மற்றும் கோவர்த்தனாம்பிகை உற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் கொரானா ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து திருக்கோவில் நிர்வாகம் சார்பில் வெளி நிகழ்ச்சிகள் உற்சவ விழாக்கள் போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவை கோவிலுக்குள் உள் நிகழ்ச்சியாக மட்டும் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.