பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் மாயம்..?

Scroll Down To Discover
Spread the love

கொரோனாவால் பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானை, வைரஸ் பரவல், மேலும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.பாகிஸ்தானில், ஒரு நாளில் அதிகபட்சமாக, 6,825 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 39 ஆயிரத்து, 230 ஆக உயர்ந்தது. மேலும், 81 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை, 2,632 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இந்திய தூதரகம் உள்ளது. இங்கு பணியாற்றி வரும் அதிகாரிகளில் 2 பேரை இன்று காலை முதலே காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.பாகிஸ்தான் வட்டார தகவலை மேற்கோள்காட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.