பனையூர் பண்ணையாரே கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க Uncle..! – விஜய் மீது அதிமுக கடும் தாக்கு..!

Scroll Down To Discover
Spread the love

கரூரில் ஒரு பிரச்சினை நடந்தது. 72 நாட்கள் விஜய் வீட்டை விட்டே வெளியே வரவில்லை. ஒரு பிரச்சினை நடந்தவுடன் 15 நாள் கட்சி அலுவலகத்தை மூடிவிட்டு சென்றுவிட்டார். அப்புறம் எப்படி கட்சி நடத்தி மக்களுக்கு நல்லது செய்யப் போகிறார். ஒரு பிரச்சினையை சந்திக்கும் திறன்கூட அவருக்கு இல்லை” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஆம்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சட்டப்பேரவை தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிடுவார்கள் என எங்களையும், பாஜகவையும் குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். 2024 மக்களவைத் தேர்தலின்போது உரிமைத் தொகை நிறுத்தப்படவில்லை. அப்படி இருக்கையில் எப்படி வரும் தேர்தலில் நிறுத்த முடியும். ஒரு திட்டம் செயல்பாட்டில் இருக்கும்போது, அதனை தேர்தல் நேரத்தில் நிறுத்த முடியாது என்பதை நாடே அறியும்.

2026 தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில்தான் இந்த ரூ.5000 அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரும் மூன்று மாதங்களுக்கான தொகையை முன்பணமாக கொடுத்துள்ளார். மேலும், கோடை காலத்துக்காக ரூ.2000 சிறப்புத் தொகையும் கொடுத்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2022 முதல் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் வருகிறது, அப்படியானால் 2026-ல் தேர்தல் வரும்போது மட்டும்தான் ஸ்டாலினுக்கு கோடை காலம் தெரிகிறதா?

திமுக மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது, அதனால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பெண்கள் படும் கஷ்டங்களை பார்த்து உரிமைத் தொகையை கொடுக்கவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று அஞ்சித்தான் இந்த பணத்தை கொடுக்கின்றார், வாக்குகளைப் பெறுவதற்காக

வரும் 3 மாதம் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்றால் மகளிர் கஷ்டப்படுவார்கள் என ஸ்டாலின் சொல்லியுள்ளார். 2021 தேர்தலின்போது மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால், திமுக ஆட்சியமைத்து 27 மாதம் கழித்துதான் உரிமைத் தொகையை வழங்கினார். நாங்கள் தொடர்ந்து சட்டப்பேரவையில் அழுத்தம் கொடுத்ததால் தான் அப்போதும் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. 27 மாதம் தாமதமாக உரிமைத் தொகை பெற்ற பெண்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்களா?

20 லட்சம் பெண்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. அவர்களுக்கு 55 மாதங்களாக அந்தத் தொகை வழங்கப்படவில்லை. அவர்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்களா?

ஜெயலலிதா கொண்டுவந்த மடிக்கணினி திட்டத்தை முடக்கிவிட்டு, தேர்தலுக்கு முன்னதாக திமுக அரசு கொடுக்கிறது. உரிய நேரத்தில் மடிக்கணினி வழங்கப்படாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழகம் வரும் அமித் ஷாவை சந்திப்பது குறித்து முடிவும் இல்லை. அதிமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் வரவுள்ளன. தவெகவின் வருகை யாரை பாதிக்கும் எனத் தெரியவில்லை. விஜய் இன்னும் ஒரு தேர்தலைக் கூட சந்திக்கவில்லை. அவர்கள் தேர்தலை சந்தித்தால்தான் என்ன செல்வாக்கு உள்ளது எனத் தெரியும். தமிழக மக்கள் விழிப்புணர்வு கொண்டவர்கள்.

விஜய்க்கு என்ன தெரியும்? கரூரில் ஒரு பிரச்சினை நடந்தது, 72 நாட்கள் அவர் வீட்டை விட்டே வெளியே வரவில்லை. ஏன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என கேட்பதாக விஜய் சொல்கிறார். தலைவர் என்றால் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். நீங்கள் எவ்வளவு கேள்வி கேட்கிறீர்கள்.

ஒரு கட்சியை நடத்தினால், நிருபர்கள், மக்கள் கேட்கும் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டியது தலைவரின் கடமை. அதனை அவர் செய்துள்ளாரா? பிரச்சினை நடந்தவுடன் 15 நாட்கள் கட்சி அலுவலகத்தை மூடிவிட்டு சென்றுவிட்டார். அப்புறம் எப்படி கட்சி நடத்தி மக்களுக்கு நல்லது செய்யப் போகிறார். ஒரு பிரச்சினையை சந்திக்கும் திறன்கூட அவருக்கு இல்லை. இது ஜனநாயக நாடு. யாரும் கட்சி தொடங்கலாம். மக்கள் அங்கிகரித்தால் வெற்றி பெறலாம்” என்றார்

அதிமுக ஐ.டி. விங் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle?அப்பா-வால சினிமா உள்ள வந்தீங்க…

வந்த சினிமா வழியே சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த், புரட்சிக் கலைஞர் விஜய காந்த ஆகியோரைப் பார்த்து COPY PASTE uu….அரசியலில், அடுத்த கட்சி வரலாற்றுத் தலைவர்களின் Legacy-யை திருடி, COPY PASTE uu…

இப்படி அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க?”தி.மு.க. எதில் எல்லாம் Out Of Control” என்பதை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அவரது உத்தரவின்படி நாமும் பதிவிட்டதைப் பார்த்து Copy அடித்து யாரோ எழுதிக் கொடுத்ததை, “Action” என்று சொன்னதும் அடி மாறாமல் ஒப்பித்துள்ளார் பனையூர் பண்ணையார் நடிகர் விஜய்…!!

சொந்தமாக ஒரு வரியையே பேசத் தெரியாதவர், அடுத்தவர் வரலாற்றைப் பற்றி கேள்வி கேட்கலாமா? கோவில் வாசலில் உடைக்கப்படும் தேங்காய் சில்லுகளைப் பொறுக்கி எடுப்பதுபோல, மற்ற கட்சிகளில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்களை சேர்த்துக்கொண்டு கட்சி என்ற பெயரில் ஒரு வாட்சப் குழுவை நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள், “அடுத்த கட்சிகளை கலைத்து விட்டு வாருங்கள்” என்று சவால் விடுவது சிரிப்பாக உள்ளது.உங்களுக்கு அரசியல் புரிதலோ, வரலாறோ இல்லை என்பதற்காக எங்கள் இயக்கத்தின் தலைவர்களை இரவல் பெற்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுத் திரிபவர்தானே நீங்கள்?

எங்கள் பெரியாரின் பெயரில், எங்கள் அண்ணாவின் பெயரில், எங்கள் புரட்சித் தலைவரின் பெயரில் சவாரி செய்வதை நீங்கள் நிறுத்துங்களேன் பார்ப்போம்!எங்கள் முழக்கம் இன்றும் “அண்ணா நாமம் வாழ்க!” தான்!

நாங்கள் என்றென்றும் புரட்சித் தலைவரின் “இரத்தத்தின் இரத்தமான” உடன்பிறப்புகள்தான்!நாங்கள் இன்றும், என்றும் முன்நிறுத்துவது எங்கள் இதயதெய்வம் “அம்மாவின் ஆட்சி”யைத்தான்!”

அம்மாவின் ஆட்சி அமைய அணிலாய்” இருந்ததாக சொல்லிய உங்களை, மிகப்பெரிய துயரத்தின்போது, 41 பேர் மரித்தபோது பேசக்கூடாது என்ற “அம்மா கற்றுத் தந்த” அரசியல் பண்போடுதான் எடப்பாடி பழனிசாமி நாகரிகத்தோடு நடந்துகொண்டார்.அப்புறம் பனையூர் பண்ணையாரே…

இந்த FDFS டிக்கெட்டெல்லாம் 2000 ரூபாய்-க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லைங்களா? அப்படி பார்த்தா உங்களுக்கு ஒரு 30 வருஷ கொள்ளை அனுபவம் இருக்கு தானே?

கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க போங்க Uncle!இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.