கனமழை – பிரதோஷம்… கார்த்திகை அமாவாசை… சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை!

Scroll Down To Discover
Spread the love

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவது வழக்கம்.

இதனிடையே, சதுரகிரி கோவிலில் பிரதோஷம் மற்றும் கார்த்திகை மாத பவுர்ணமி வழிபாட்டிற்காக 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்திருந்தனர்.

ஆனால், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சதுரகிரி செல்லும் மலைப்பாதைகளில் உள்ள ஆற்றுப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழை காரணமாக சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இம்மாதம் பிரதோஷம், பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.