ஆசிரியர்கள் கிண்டல் – பள்ளி மாடியில் இருந்து குதித்து 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை..!

Scroll Down To Discover
Spread the love

மேற்குவங்காள மாநிலம் தெற்கு பர்கனாஸ் மாவட்டம் கஸ்பா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வரும் மாணவன் ஷேக் ஷான் (வயது 16). இந்நிலையில், ஷேக் ஷான் நேற்று மாலை பள்ளிக்கூடத்தின் 6வது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.

அவரை மீட்ட மாணவர்கள், பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவன் ஷேக் ஷானை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேவேளை, பாடம் சரியாக படிக்காததால் தன் மகனை இரு ஆசிரியர்கள் கிண்டல் செய்ததாகவும், அதனால் மனமுடைந்து இந்த முடிவு எடுத்துள்ளான் என்றும் ஷேக் ஷானின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தன் மகன் உயிரழப்பிற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.