ஐஸ்கிரீமில் இறந்து கிடந்த தவளை – சாப்பிட்ட குழந்தைகளுக்கு நேர்ந்த கதி..!

Scroll Down To Discover
Spread the love

மதுரை கோவலன் நகர் மணிமேகலை தெருவை சேர்ந்தவர் அன்புசெல்வம். இவரது மனைவி ஜானகிஸ்ரீ. தைப்பூச விழாவை முன்னிட்டு நேற்று இவர் தனது மகள்கள் மித்ராஸ்ரீ (வயது 8), ரக்சனாஸ்ரீ (7) மற்றும் உறவினர் மகள் தாரணி (4) ஆகியோரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு அழைத்து வந்தார்.

அப்போது கோவில் அருகில் உள்ள ஒரு சிற்றுண்டி கடையில் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தார். அதனை சாப்பிட்ட 3 குழந்தைகள் திடீரென வாந்தி எடுத்தனர். இதனால் சந்தேகமடைந்த ஜானகிஸ்ரீ குழந்தைகள் சாப்பிட்ட ஐஸ்கிரீமை வாங்கி பார்த்தார். அப்போது ஐஸ்கிரீமில் ஒரு தவளை செத்து கிடந்தது. இதையடுத்து வாந்தி எடுத்த 3 குழந்தைகளும் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஐஸ்கிரீமில் தவளை கிடந்தது பற்றி ஜானகிஸ்ரீ திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளிர்பான கடையின் உரிமையாளர் துரைராஜன்(60) என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர்.