மதுரை அருகே அலங்காநல்லூரில் ஆக்கிரமப்பை அகற்றிய நெடுஞ்சாலைதுறையினர்..!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நெடுஞ்சாலைதுறையினர் ஆக்கிரமப்பை போல அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை அருகே அலங்காநல்லூர் கேட்டுக் கடையிலிருந்து, ஐயப்பன் கோவில் வரையிலான இரு பக்க ஆக்கிரமிப்புக்களை, அகற்றுவதற்கு பலமுறை பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தும், தற்போது இந்த கோரிக்கையை ஏற்று, நெடுஞ்சாலை துறை உதவிகோட்ட பொறியாளர் ராதா முத்துக்குமார், உதவி பொறியாளர் வெங்கடேஷ் பாபு, வருவாய் ஆய்வாளர் அனுசுயா ,கிராம நிர்வாக அலுவலர் கவிதா, கல்லணை வி.ஏ.ஓ. கணேசன் மற்றும் காவல் துறையினர், வருவாய் துறையினர், நெடுசாலைதுறையினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.