சென்னை விமான நிலையத்தில் ரூ.98.55 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..!

Scroll Down To Discover
Spread the love

மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை கடத்தி வரப்பட்ட ரூ.98.55 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரகசிய தகவலின் அடிப்படையில், மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த இலங்கையைச் சேர்ந்த முகமது இம்ரான் என்பவரை சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது மறைத்து எடுத்து வரப்பட்ட 11 பண்டல் தங்கப்பசை கண்டுபிடிக்கப்பட்டது. அதை உருக்கிப் பார்த்தபோது, 2.137 கிலோ தங்கம் கிடைத்தது.

இதன் மதிப்பு ரூ.98.55 லட்சம் ஆகும். தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட பயணியைக் கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் கே.ஆர். உதய் பாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது