சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் ஏப்ரல் 9ம் தேதி தாக்கல்..!

Scroll Down To Discover
Spread the love

சென்னை மாநகராட்சிக்கு மேயர், துணை மேயர் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்று கொண்டனர். மேயராக பிரியாவும் துணை மேயராக மகேஷ்குமாரும் மற்றும் கவுன்சிலர்களும் தனித்தனியாக பதவி ஏற்றனர்.

இந்நிலையில் 2022 -23ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் ஏப்ரல் 9ம் தேதி மாமன்றத்தில் காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்கிறார். பட்ஜெட் மீதான விவாதமும் அன்றே நடைபெற உள்ளது .இறுதியில் 2022-23ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்கப்படுகிறது.