எல்லை தாண்டி மீன் பிடித்தால் : 21 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை..!

Scroll Down To Discover
Spread the love

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில், கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 21 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் நாகை மாவட்ட மீனவர்கள் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.